இந்தோனேசியா நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான மேற்கு பப்புவா பகுதியில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து சில நிமிடங்களுக்குப் பிறகு 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக குடியிருப்புகள் போன்ற கட்டடங்கள் குலுங்கியதில் அச்சமடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். எனினும், நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதுமில்லை.