day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆண்-பெண் திருமண வயது, வாரிசுரிமைக்கு ஒரே சட்டம் உருவாக்க கோரிய மனு தள்ளுபடி : சுப்ரீம் கோர்ட்

ஆண்-பெண் திருமண வயது, வாரிசுரிமைக்கு ஒரே சட்டம் உருவாக்க கோரிய மனு தள்ளுபடி : சுப்ரீம் கோர்ட்

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டில் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்குமார் உபாத்தியாயா என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்னும் சிலரும் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த விவகாரம் பாராளுமன்றம், சட்டமன்ற அதிகாரவரம்புக்குள் வருவதால் விசாரணைக்கு ஏற்கக்கூடாது’ என வாதிட்டார். இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ‘இந்த விவகாரம் பாராளுமன்ற, சட்டமன்ற அதிகாரம் வரம்புக்குள் வருவதால் விவாகரத்து, குழந்தைகள் தத்தெடுப்பு, வாரிசுரிமை, ஜீவனாம்சம், ஆண்-பெண் திருமண வயது ஆகியவற்றுக்கு ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க பாராளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது’ என தெரிவித்து மனுக்களை முடித்து வைத்தது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!