day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் – செல்வகுமாரி, வழக்கறிஞர்

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் – செல்வகுமாரி, வழக்கறிஞர்

தமிழக சட்டப்பேரவைத் தெர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில் வாக்காளர்களுக்குக் கட்சிகள் பணம் கொடுத்தது விவாதப் பொருளானது. ’ஓட்டுக்குக் காசு கொடுப்பது கிரிமினல் குற்றம். இங்கு யாரும் காசுக்கு ஓட்டை விற்கவில்லை’ என, அசாம் மாநில மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில், காசுக்கு ஓட்டை விற்கின்றனர் என, தேர்தல் அதிகாரி கூறியிருப்பதிலிருந்து, தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். அதாவது, அரசியல்வாதிகள் எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்பது தெரிந்து, அதிலிருந்து தங்களது பங்கை, லஞ்சமாக ஓட்டளிக்கக் கேட்கின்றனர்.
தமிழகத்தில், ஓட்டுகளை மனதில் வைத்தே, இலவசங்கள் அதிகாரப்பூர்வமாக அளிக்கப்படு கின்றன. ஓட்டுக்குப் பணம் தருவது என்பது, மறைமுகமாக வழங்கப்படுகிறது. இலவசங்கள், மக்கள் செலுத்தும் வரிப் பணத்திலிருந்து நேரடியாக அளிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கும் பணத்தை, சந்தையில் விற்கும் பொருட்கள் மூலமாக, லஞ்சம் கொடுத்தவர்கள் வசூலித்து விடுகின்றனர். அதுவும், மக்களின் தலையில்தான் விழுகிறது. இதைப் புரிந்துகொண்டும், ஒட்டுக்குப் பணம் பெறுகின்றனர் என்பது ஆச்சரியமாக உள்ளது.
2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டுப் பொங்கல் வைக்கவும், பொங்கல் பரிசாக இந்த ஆண்டு 2,500 ரூபாயை ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு அளித்தது. இதைக் கூச்சப்படாமல் அனைவரும் வாங்கிக் கொள்கின்றனர். இந்த அன்பளிப்பு, மக்கள் வரிப்பணத்திலிருந்துதான் வழங்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைவிட, தமிழகத்தில் தான் ஒட்டுக்குப் பணம் கொடுக்கும் செயல், அதிகளவில் நடக்கிறது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை எப்படிச் செயல்படுத்தலாம் என்பதை, ஒரு குழு அமைத்து அரசியல் கட்சிகள் யோசிக்கும் அவலம் தமிழகத்தில்தான் நடக்கிறது. ஒட்டுக்குக் காசு கொடுப்பவர்கள் அத்தொகையை அரசுத் திட்டங்களிலிருந்து கொள்ளையடிக்கின்றனர். இதனால், நமக்குக் கிடைக்க வேண்டிய சேவையின் தரம் குறைகிறது.
ஓட்டுக்காகப் பணம் கொடுப்பதும் வாங்குவதும் இந்திய தண்டனைச் சட்டம் ( ஐகஇ) 171 ஆ யின் படி தண்டனைக்குரிய குற்றம். ஒருவர் ஓட்டுக்காகப் பரிசுப் பொருள்களை வழங்குவது அல்லது பணமாகக் கொடுப்பது அல்லது வேறு விதமாக வாக்காளர்களுக்குக் கொடுக்க முயல்வது என அனைத்துமே இந்தப் பிரிவுக்குள் அடங்கும். இப்படிச் செய்தால் ஓராண்டு சிறைத் தண்டனை உண்டு. இது வாக்காளர்களுக்கும் பொருந்தும்.
இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988
நாட்டில் உள்ள பல அரசுத் துறைகளில் லஞ்ச-ஊழல் பெருகியதைக் கண்டு, அதனைக் கட்டுப்படுத்த வேண்டி நாட்டிலுள்ள சமூகச் சிந்தனையாளர்கள் ஒன்றுகூடி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேசிய அளவில் லஞ்ச -ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு மத்தியிலும் மாநிலங்களிலும் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை அமைக்க வேண்டும். அந்த அமைப்பு தன்னாட்சியுடனும் சுதந்திரத்துடனும் செயல்படும் வகையில் அதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். அந்த அமைப்பிற்குத் தலைவராக இருப்பவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவராகவோ இருக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளுடன் கூடிய திட்ட வரைவு தயாரித்துச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல சிபாரிசுகளைக் குறிப்பிட்டு 1983ஆம் வருடத்தில் தீர்ப்பு வழங்கி உறுதி செய்தது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி தேசிய அளவில் பொருந்தும் வகையில் மத்திய அரசால், இந்திய ஊழல் தடுப்புச் சட்டம்-1988 இயற்றப்பட்டது.
வரையறை என்ன?
இந்தச் சட்டத்தின்படி ஒரு பொது ஊழியர், தன்னால் செய்யப்பட வேண்டிய அதிகாரப் பூர்வமான வேலைக்குச் சட்டப்படி பெற வேண்டிய சம்பளத்தைத் தவிர கைக்கூலி பெறுவது, பொது ஊழியம் செய்பவர் மறுபயன் இல்லாமல் விலை மதிப்புள்ள பொருட்களைத் தன்னுடைய அலுவல் நடவடிக்கையில் ஈடுபட்டு ஒருவரிடம் வாங்குவது குற்றமாகும். ஆனால், இதன்படி ஒரு பொது ஊழியர் லஞ்சம் வாங்குவது குற்றம் எனக் கருதப்பட கீழ்க்கண்ட அம்சங்களும் இருக்க வேண்டும்.
டூ சம்பந்தப்பட்டவர் பொது ஊழியராக இருத்தல் வேண்டும்.
டூ அவர் செய்யும் வேலை அதிகாரப்பூர்வமாக இருக்க வேண்டும்.
டூ ஒரு பொது ஊழியர் தான் செய்ய வேண்டிய பணியைச் செய்வதற்கோ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பிறரிடம் கேட்டல் அல்லது பெறுதல்.
டூ பொது ஊழியர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சலுகை அளித்துப் பண மதிப்பு கொண்ட அனுகூலம் பெறுவதும், ஒரு குடிமகனிடம் இருந்து ஒரு பொது ஊழியர் அதிகாரப்பூர்வமான பணியைச் செய்வதற்காக மறுபயனின்றி விலைமதிப்புள்ள பொருளைப் பெறுவதும் லஞ்சம் பெறுவது ஆகும்.
டூ அந்தப் பொது ஊழியர் நேரடியாகவோ அல்லது இடைத்தரகர் மூலமாகவோ லஞ்சம் பெற்றால் அந்தப் பொது ஊழியரும், அவருக்கு லஞ்சம் வழங்குபவர்களும் குற்றவாளிகள் ஆவார்கள்.
டூ ஒரு பொது ஊழியர் தனது வருமானத்திற்குப் பொருந்தாதவிதத்தில் அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்தலும் சட்டத்தின்படி குற்றம் என இந்தச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
என்ன தண்டனை?
லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாகத் தனி நபரோ அல்லது அரசுத் தரப்பிலோ லோக் ஆயுக்தாவில் ஒரு புகாரை அளித்தால், அதை விசாரணை நடத்திப் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் வழக்குப் பதிவு செய்யப்படும். சம்பந்தப்பட்ட பொது ஊழியர் மீதான புகார் குறித்து விசாரணை நடத்துவதற்குத் தனியாக குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழு முழுமையாக விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகையைத் தலைமையிடம் தாக்கல் செய்யும். அந்தக் குற்றப் பத்திரிகையின் மீது வாதி, பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் வாதம் செய்வார்கள். வாதங்கள் அடிப்படையிலும், சாட்சிகள் அடிப்படையிலும் இறுதியாக நீதிபதி வழங்கும் தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி தவறு செய்த அந்தப் பொது ஊழியருக்குக் குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட பொது ஊழியர் மேல்முறையீடு செய்யவும் அனுமதி உண்டு.
ஊழல் ஆணையம்
(இஞுணtணூச்டூ ஙடிஞ்டிடூச்ணஞிஞு இணிட்ட்டிண்ண்டிணிண)
நமது நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு மத்திய அரசு மத்திய விழிப்புணர்வு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுத் துறைகளில் உள்ள ஊழல் குறித்த வழக்குகளை மத்தியப் புலனாய்வுக் குழுவும் மாநில அரசுத் துறைகளில் உள்ள ஊழல் குறித்த வழக்குகளைக் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்வர் 6ஆம் தேதி வரை ஒரு வார காலம் ஊழல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு வாரமாக இந்தியா முழுவதும் அரசு அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
புகார் செய்வது எப்படி?
ஊழல் குறித்துப் புகார் செய்யும்போது புகார்தாரர் தனது பெயர் மற்றும் முகவரியைத் தெளிவாகக் கூற வேண்டும். மத்திய அரசுத் துறை சம்பந்தமான புகார் என்றால் மத்திய விழிப்புணர்வு ஆணையத்துக்கும், மாநில அரசுத் துறை சம்பந்தமான புகார் என்றால் ஊழல் தடுப்பு இயக்குநருக்கும் புகார் செய்யலாம். டttணீ://ஞிதிஞி.ணடிஞி.டிண என்ற இணையதளம் மூலமாகவும் புகார் செய்யலாம். உங்கள் புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும், புகார் அளித்த பின்னர் உங்களுக்குக் கொடுக்கும் பதிவு எண் மூலமாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இணைய தளத்தில் இது குறித்த முழுமையான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தவறான புகாருக்குத் தண்டனை
ஒரு பொது ஊழியர் குறித்துப் பொய்யான புகார் தருவது இந்திய தண்டனைச் சட்டம்- பிரிவு 182இன் படி தண்டனைக்குரியது ஆகும். பெயரில்லாத, சரியான முகவரியில்லாத புகார்கள் தள்ளுபடி செய்யப்படும். ஊழலில் சிக்கிய அதிகாரிகள் பற்றிய தகவல்களை மத்திய விழிப்புணர்வு ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் தனித்தொகுப்பாக வெளியிட்டு வருகிறது
ஊழல் தடுப்புச் சட்டம் 1988இல் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இந்தச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
லஞ்சம் கொடுப்பவருக்கும் தண்டனை
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தப் புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். புதிய சட்டத்தின்படி லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் இனி சிறைத் தண்டனை கிடைக்கவுள்ளது. லஞ்சம் கொடுப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும் அரசு ஊழியர்கள், அரசி யல்வாதிகள், அரசு அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்டோருக்குப் பாதுகாப்பையும் இந்தப் புதிய சட்டம் வழங்குகிறது. இவர்கள் மீது ஊழல், லஞ்சக் குற்றச்சாட்டு எழும்பட்சத்தில் சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள், சம்பந்தப்பட்டவரின் மேல் அதிகாரியிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே அவர்களை விசாரிக்கவோ கைது செய்யவோ முடியும்.
அதற்கான ஷரத்துகள் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபடும் அதிகாரி, அரசு ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க யாருடைய அனுமதியும் தேவையில்லை எனச் சட்டம் தெரிவித்துள்ளது. புதிய சட்டமானது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
வர்த்தக அமைப்புகளும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அதைப் போலவே ஊழல் வழக்கு விசாரணையை 2 ஆண்டுகளுக்குள் நடத்தி முடிக்கவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!