சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ஐடிஐ முடித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தொழிற்கல்வியை முடித்த சுமார் 2000 மாணவர்கள், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், உள்ளிட்ட 6 பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் உட்பட அதன் உறுப்புக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் தொழிற்கல்வி முடித்த மாணவர்களுக்கு 2 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 18ஆம் தேதி முதல் பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும். பொறியியல் கல்லூரிகளில் சேர 85 ஆயிரம் பேர் இதுவரை விண்ணப்பித்து உள்ளனர். பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்த அனைவருக்கும் இந்தாண்டு சீட் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.