இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியா முழுவதும் 18 ஆயிரத்து 840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 04 ஆயிரத்து 394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 028 ஆக உயர்ந்துள்ளது. 16 ஆயிரத்து 104 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 980 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 43 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், கொரோனால் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 386 பேராக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை நாடு முழுவதும் 1,98,65,36,288 பேருக்கு கொரோனா தடுப்பூசி செல்லுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 12,26,795 பேருக்கு தடுப்பூசி செல்லுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. முன்னதாக நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிந்து தற்காத்துக்கொள்வது அவசிமாகிறது.