day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

எல்லையில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்படாது : இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் தகவல்

எல்லையில் அமைதி நிலவும் வரை இருதரப்பு உறவுகளில் சுமுகநிலை ஏற்படாது : இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் தகவல்

பனாஜி : கோவாவின் பனாஜி நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் மாநாடு நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பு நாடுகள் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மண்டல பாதுகாப்பு போன்ற முக்கியம் வாய்ந்த புவிஅரசியல் விவகாரங்கள் பற்றி மந்திரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர் பேசிய மத்திய மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு துறை மந்திரி கின் கேங் உடனான இருதரப்பு சந்திப்பில், எல்லை பகுதியில் காணப்படும் நிலைமை பற்றி மிக வெளிப்படையாக ஆலோசனை நடைபெற்றது. எல்லை பகுதியில் இயல்பற்ற நிலை காணப்படுகிறது. ஜி-20 மாநாட்டின் ஒரு பகுதியாக கூட கின் கேங்கிடம் இந்த விவகாரம் பற்றி நான் பேசியிருக்கிறேன் என்று கூறியுள்ளார். லடாக் பிரிவில் அசல் எல்லை கோட்டு பகுதியில் இருந்து முன்கள வீரர்களை திரும்பி பெறும் நடைமுறையை மேற்கொள்ள இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூரியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!