இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விலகுவதாக தனது ஓய்வை சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில், விரைவில் தொடங்க இருக்கும் ஐபிஎல் மகளிர் போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளதாக ஐசிசிக்கு அளித்தப்பேட்டியில் கூறியுள்ளார். அதில், எதைப் பற்றியும் நான் முடிவெடுக்கவில்லை. மகளிர் ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்த முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன். ஓய்வுக்குப் பிறகு என் வாழ்க்கை மெதுவாக நகரும் என நினைத்தேன். முன்னர் போல, இந்த நாள், அடுத்த வாரம், அடுத்தத் தொடர் என்று அடுத்தடுத்த போட்டிகளைப் பற்றி திட்டமிட வேண்டியதில்லை என்று நினைத்தேன். ஆனால், ஓய்வை அறிவித்த பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு பிறகு பட விளம்பரங்களில் பங்கேற்றேன். கிரிக்கெட் வீராங்கனையாக இருந்தது போலவே இப்போதும் வாழ்க்கை பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. இதெல்லாம் முடிந்த பிறகு ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை உணர்வேன் என நினைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.