day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தோல்வி காரணமாக 34 பேர் தற்கொலை

தோல்வி காரணமாக 34 பேர் தற்கொலை

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வை அந்த மாநிலம் முழுவதும் இருந்து மொத்தமாக 6 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 70.70 சதவிகிதம் பேர் மாணவிகளும், 64.02 சதவிகிதம் பேர் மாணவர்களும் அடங்குவர். இந்த தேர்வின் முடிவுகள் கடந்த 3ஆம் தேதி வெளியானது. அதில், மொத்தமாக 4 லட்சம் மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ச்சிப்பெற்றுள்ளனர். 2 லட்சம் பேர் தோல்வி அடைந்தனர். தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக மாநிலம் முழுவதும் 34 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!