சென்னை: தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய கூடும் . புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.