day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பசில் ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தம்

பசில் ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் முயற்சி தடுத்து நிறுத்தம்

இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அரசு பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினர் ஒவ்வொருவராக பதவி விலகி வருகின்றனர். அந்த வகையில் இன்று அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கையெழுத்திட்டார். முன்னதாக நாளை வரும் ராஜினாமா செய்ய இருப்பதாக நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்திருந்த நிலையில் இன்றே தனது ராஜினாமா கடிதத்தில் கோத்தபய கைழுத்திட்டுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் புதிய அதிபர் தேர்தல் ஜூலை மாதம் 20ஆம் தேதி நடைப்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, இலங்கை அதிபர் பதவிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலங்கையில் இருந்து ராஜபக்சே குடும்பத்தினர் துபாய் வழியாக அமெரிக்கா செல்ல முயற்சித்து வருதாக தகவல் வெளியாகி வருகிறது. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து பசில் ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்ப முன்றதாகவும், விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவரின் ஆவணங்களை சரிபார்க்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், விமான நிலையத்தில், மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை அடுத்து அவர் வெளிநாடு செல்லும் முயற்சியை தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!