day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேளுங்கள் – அமித்ஷா ஆதங்கம்

மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேளுங்கள் – அமித்ஷா ஆதங்கம்

குஜராத் மாநில கலவர வழக்கில் பிரதமர் மோடிக்கு தொடர்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”குஜராத் கலவரம் தொடர்பாக அப்போது பாரதிய ஜனதா கட்சி மீது சில அரசுசாரா நிறுவனங்களும், அரசியல் உள்நோக்கம் கொண்ட பத்திரிகையாளர்களும் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு மோடி ஆஜரானபோது, அவருக்கு ஆதரவாக யாரும் போராட்டம் நடத்தவில்லை. 19 ஆண்டுகள் மிகுந்த வலியுடன் போராடி பிரதமர் மோடி குஜராத் கலவர வழக்கில் வெற்றிப்பெற்றுள்ளார். அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டியவர்கள், மனசாட்சி இருந்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

#amitsha #pmmodi

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!