day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்குவதாக அறிவிப்பு : அமெரிக்கா, ஜெர்மனி

உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்குவதாக அறிவிப்பு : அமெரிக்கா, ஜெர்மனி

வாஷிங்டன்: ரஷியா – உக்ரைன் இடையியேயான போர் 11 மாதங்களாக நீடித்து வருகிறது. ரஷிய ராணுவத்தின் தாக்குதல்களை சிறிய நாடான உக்ரைன், உலக நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான உதவிகளுடன் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் ராணுவத்திற்கு பீரங்கிகள் வழங்கப்போவதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் :- உக்ரைனுக்கு 31 எம்1 அப்ராம்ஸ் ரக பீரங்கிகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். உக்ரைன் ராணுவம் தங்கள் எல்லையை தற்காத்துக் கொள்ளும் திறனை அதிகரிப்பதற்காகவும், அவர்களது இலக்குகளை அடைவதற்காகவும் இந்த பீரங்கிகள் உதவும் என்று பைடன் கூறியுள்ளார். மேலும் இது ரஷியாவிற்கான அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்த அவர், ரஷிய ராணுவம் தங்களுக்கு சொந்தமான இடத்திற்கு திரும்ப சென்றுவிட்டால் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஷோல்ட்ஸ் :- உக்ரைனுக்கு ஒரு பட்டாலியன் பீரங்கிகளை வழங்க ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 14 லெப்பார்ட் 2 ஏ6 வகை பீரங்கிகள் உக்ரைன் ராணுவத்திடம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!