செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சங்க இலக்கியங்களை இந்திய மொழிகளிலும் அயலக மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், அதன் அங்கமாக திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து, அனைவருக்கும் தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழரின் பண்பாட்டை தெரிவிக்கும் நடவடிக்கையை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட பணியாக இந்த மாத இறுதிக்குள்ளாக மொழிப்பெயர்க்கப்பட்ட திருக்குறளை அச்சிடும் பணி நிறைவடைந்துவிடும் என எண்ணப்படுகிறது. எனவே, ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறளை வெளியாகும் என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் சந்திரசேகர் தகவல் தெரிவித்துள்ளார்.