இன்னும் 75 நாள்களில் சர்வதேச யோகா தினம் வர இருக்கிறது. இந்த நிலையில் யோகா தினத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது என அகில இந்திய ஆயுர்வேத நிறுவனத்தின் தனுஷா நர்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘ஆயுர்வேதம், யோகா ஆகியவை ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். யோகாவை பின்பற்றுவதன் மூலம் நோய்கள் பலவற்றைத் தவிர்க்கலாம்’ என்றார்.