day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கவிதை

கவிதை

காயா
பழமா
தன்னிடத்திலிருந்து
கேள்வி கேட்டுவிட்டு

எதிரே போய் உட்கார்ந்து
எதிராளுக்காக
காயோ
பழமோ சொல்லும்
விளையாட்டுத் தோழமையற்ற
சிறுமியைப் போல்

நானே நீயாகவும்
நீயே நானாகவும்
மாறி மாறிப் பேசிக் கொண்டிருக்கிறேன்
நீயற்ற பொழுதுகளில்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

காலைச் சந்திப் பூசை முடிந்து
கருவறை அடைத்து,
முழுமையாகத் தாளிட்டுவிடாத
கோயில் முககோபுரத்தின் கீழ் அமர்ந்திருக்கும்
அந்த நினைவழிந்தவளின் நினைவில்
எது நிறைந்திருக்கும்?
கருவறை கடவுளா?
கோபுரத்தின் பிரம்மாண்டமா?
கால்மேல் ஊர்ந்துசெல்லும்
சிற்றெறும்பின் பாதையைப் பின்தொடரும்
அவளின் நினைவுகளில்
தளும்பி மேலெழுந்து வந்திருக்கக் கூடும்,
அவள் விரல்களைக் கோர்த்துக்கொண்ட
விரல்கள்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

நீண்டு செல்லும்
பிரகாரத்தின்
சிறு வளைவு தரும்
சொல்ப தனிமையைக் கடக்கிறோம்.

அநாதிக் காதலர்கள்
கடந்திருக்கும் பிரகாரம்
நம் தனிமையைக் காக்க
கண்மூடித் திறந்து
நம்மைப் பதின்பருவத்திற்குத் திரும்பச் செய்கிறது.

வளைவின் முடிவில்
பிரிந்து நடக்கும் கால்களின் சில்லிப்பில்
நம் ரகசியம் அறிந்த
கருவறை உமையவளின்
புன்னகை விரியும்.

– அ . வெண்ணிலா

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!