day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கனமழை: 23 பேர் உயிரிழப்பு, 75 பேர் காயம்

கனமழை: 23 பேர் உயிரிழப்பு, 75 பேர் காயம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், ஷேக்புரா, நரோவல் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. இதனால், ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மின்கசிவு, சுவர் இடிந்து விழுந்ததில் 75க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
வரும் முப்பதாம் தேதி வரை பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் கன மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.  இதன் காரணமாக தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும், வாகனங்களே கவனமாக ஓட்டு மாறும், மின் கம்பங்களில் இருந்து விலகி இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நகர் புறங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாகாண அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பிரதமர் சபாஷ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார். 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!