Thursday, 18 September 2025
21:17:51
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு கொரோனா!

ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு கொரோனா!

புதிதாக உருமாற்றம் அடைந்திருக்கும் கொரோனா வைரஸால், இன்னும் மக்கள் அச்சத்திலேயே உறைந்துள்ளனர். கொரோனா தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால் அதை முழுமையாக அழிக்கமுடியாத சூழலே நிலவுகிறது. என்றாலும், அதைத் தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வாக இருக்கிறது. இந்த நிலையில், உலக நாடுகள் பலவற்றில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் வேகம் பிடித்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,247 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 2 ஆயிரத்தைத் தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை இன்று 1,247 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,25,11,701 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,21,966 ஆக உயர்ந்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!