இந்தியா முழுவதும் புதிதாக கொரோனா பாதிப்பு 796 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய சுகாதரத்துறை தகவல் அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4.30 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு 10,889 பேர் சிகிச்சைப்பெற்று வருகிறனர். அதேபோல, நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 19பேர் பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 5.21லட்சமாக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் சதவீதம் 0.03 சதவீதமாக உள்ளது. தவிர, 98.76 சதவீதமாக குணமடைந்தோர் விகிதம் உள்ளது. எனினும், இன்று கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நேற்றைய நாளைக்காட்டிலும் 169 பேர் குறைவு ஆகும்.