கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து இன்று அதிகாலை 7 காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறியன. இதனையடுத்து, தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் யானைகள் உலா வந்தன. அதில், 3 யானைகள் மளிகைக்கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டன. இதனையடுத்து, யனைகள் உலா வரும் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே, யானைகள் மளிகை கடை ஷட்டரை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதை அப்பகுதி வாசிகள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.