ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி, உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்யும் பூ, சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு விலை நிர்ணயம் செய்து மற்ற பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ விலை ஒரு கிலோ ரூ. 70 முதல் ரூ.80 வரை விற்பனையாகி வந்தநிலையில் சம்பங்கி பூக்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ விலை ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனையானது. மேலும் தனியார் நறுமண ஆலைகளும் பூக்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுமார் 10 டன் அளவுள்ள சம்பங்கி பூக்களை சாலையோரம் கொட்டி சென்றனர்.