திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டு பகுதியை சேர்ந்த சந்துரு(15) பத்தாம் வகுப்பும், கிருஷ்ணகிரி மாவட்டம் மகனூர்பட்டியை சேர்ந்த பரத்(17) பதினொன்றாம் வகுப்பும் விசமங்களம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில், இன்று மாணவன் பரத் தனது இருசக்கர வாகனத்தில் சந்துருவை தேர்வு எழுத திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நாகராஜம்பட்டி அருகே அழைத்து சென்று இருந்த போது சிம்மணபுதூர் காமராஜர் நகரைச் சேர்ந்த தருமன் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்து மாணவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவன் சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த பரத் மற்றும் தருமன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக பேராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம், விபத்து நடந்த இடத்திற்கு அருகே இருந்தும், தகவல் அளித்து சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால் படுகாயம் அடைந்தவர்களை கார் மூலமே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் சம்பவம் குறித்து திருப்பத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.