15ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 64ஆவது லீக் ஆட்டத்தில், மயங்க் அகர்வால் தலைமையிலான கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியுடன் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதியது. நேற்று மாலை 7.30 மணிக்கு மும்பை டி.ஒய்.பட்டீஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தபோட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து, முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிப்பெற்றது. இந்தபோட்டியுடன், இந்த இரு அணிகளும் 30ஆவது முறையாக நேருக்கு நேர் எதிர்க்கொண்டன. இதில் 14-ல் டெல்லி அணியும், 15-ல் பஞ்சாப் அணியும் வெற்றிப்பெற்று உள்ளது. ஒரு போட்டி டையாகியுள்ளது. இந்தநிலையில், இதுவரை இந்தத்தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றியும் 6 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. அதேசமயம், பஞ்சாப் அணி விளையாடிய 13 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து புள்ளி பட்டியலில் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்தபோட்டில்யில் வெற்றிபெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு டெல்லி அணிக்கு நீடிக்கிறது. ஆனால், பஞ்சாப் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.